Monday, May 16, 2011

“செக்ஸ்” தொல்லையால் காதலனை கொன்றேன் ; கள்ளக்காதலி வாக்குமூலம்.

“செக்ஸ்” தொல்லையால்  காதலனை கொன்றேன்; கள்ளக்காதலி வாக்குமூலம்

சென்னை தண்டையார் பேட்டை ரெட்டிசுழி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (26). எலக்ட்ரிஷியன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்யாவின் மனைவி இந்திராவுக்கும் (28) கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்திரா, சரவணனுடன் தொடர்வை துண்டித்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் நேற்று இந்திரா வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். இந்த மோதலில் சரவணனை கத்தியால் குத்தி இந்திரா கொலை செய்தார்.

தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்ய சரவணன் வந்ததாகவும் அப்போது மின்சாரம் தாக்கி அவர் இறந்து போனதாகவும் இந்திரா போலீசில் கூறினார். சந்தேகம் அடைந்த தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு விசாரணை நடத்தியதில் இந்திரா கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து போலீசில் இந்திரா அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனக்கும், சரவணனுக்கும் 2 1/2 வருடமாக தொடர்பு இருந்தது. எனது பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் நிலையில் இருந்ததால் சரவணனுடன் உள்ள தொடர்பை துண்டிக்க நினைத்தேன். ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சென்றேன்.

சரவணன் மீண்டும் அங்கு வந்து எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். கடந்த 10 நாட்களாக அவரது தொல்லையை தாங்க முடியவில்லை. நேற்று வீட்டுக்கு வந்து முன்புபோல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்தேன். நீ வேறு யாருடன் தொடர்பு வைத்து உள்ளாய் என்று கூறி தகராறு செய்தார்.

ஒரு கட்டத்தில் என்னை கத்தியால் குத்த முயன்றார். உடனே நான் அந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தினேன். அவரது வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. நான் ஒருமுறைதான் குத்தினேன். அதில் அவர் இறந்து விட்டார். காயம் தெரியாததால் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறி தப்ப முயன்றேன்.

இவ்வாறு இந்திரா கூறினார். கைதான இந்திரா ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments: