Monday, May 16, 2011

புற்றுநோய் தாக்கும் அபாயம் : வயர்லெஸ் - செல்போன்கள் மூளையை பாதிக்கும்.

புற்றுநோய் தாக்கும் அபாயம்: வயர்லெஸ் இண்டர்நெட்- செல்போன்கள் மூளையை பாதிக்கும்; பள்ளிகளில் தடை செய்ய ஐரோப்பிய நிபுணர்கள் சிபாரிசு

உலக நாடுகளில் இண்டர்நெட், செல்போன்களின் பயன்பாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவில் செல்போன்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரது கைகளிலும் செல்போன்கள் தவழ்கிறது. தற்போது வயல்லெஸ் இண்டர்நெட் இணைப்புகளும் வந்து விட்டது.

செல்போன்கள், வயர்லெஸ் இண்டர்நெட், கார்டுலெஸ் போன்கள் உடல்நலத்துக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக ஐரோப்பிய நிபுணர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றை பயன்படுத்தும்போது அதில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோமேக்னடிக் கதிர்வீச்சுக்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்றும் மூளையை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

எனவே அவற்றை பள்ளிகளில் பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடை செய்து மாணவர்களையும் சிறுவர்களையும் காப்பாற்றுங்கள் என்று ஐரோப்பிய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள், புகை பிடித்தல், பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதும் உடல்நலத்துக்கு கேடு என்று தெரிவித்துள்ளனர். இவற்றை யெல்லாம் விட வயர்லெஸ் இண்டர்நெட் இணைப்புகளும், செல்போன்களும்தான் ஆபத்தானவை என்றும் கூறி உள்ளனர்.

ஆனால் லண்டனைச் சேர்ந்த லேபெர்க்கிலி என்பவர் மொபைல் போன்களால் ஏற்படும் ஆபத்து குறித்து ஆராய்ச்சி நடத்தியபோது, அவற்றால் ஏற்படும் பாதிப்பு மிக மிக குறைவு என்று தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

No comments: