Thursday, May 19, 2011

மெரீனா கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு.

மெரீனா கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சையது நூர்அகமது. மருந்துக் கடை அதிபர். இவரது மகள் தமன்னா (வயது 5). கடந்த 11-ந்தேதி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சையது நூர்முகமது மெரினா கடற்கரைக்கு சென்றார். உழைப்பாளர் சிலை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தமன்னா திடீரென மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் கடற்கரை முழுவதும் தமன்னாவை தேடினர். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. தமன்னாவை கண்டு பிடிப்பதற்காக துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளன.

சென்னை மட்டுமின்றி, ஆந்திர மாநில பகுதிகளிலும் திருப்பதி கோவில் அருகிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இருந்த போன் நம்பரை பார்த்து ராஜவேலு என்ற வாலிபர் தமன்னாவின் தந்தை சையது நூர் முகமதுவிடம் பேசியுள்ளார். அப்போது அவர், "திருப்பதி கோவில் அருகே உங்கள் மகளை நான் பார்த்தேன். அவளுடன் பெண் ஒருவரும் இருந்தார்'' என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை சையது நூர்முகமது போலீசிடம் தெரிவித்தார். உடனடியாக தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு ஆஸ்பத்திரி அருகே அனாதையாக நின்று கொண்டிருந்தார். அரசு ஆஸ்பத்திரி போலீசார் மீட்டனர். சிறுமியை கடத்தியவர்கள் அவளை ஆஸ்பத்திரி அருகே விட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தும் போது முழு விவரம் தெரியவரும்.

No comments: