Friday, May 20, 2011

மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள்: ரூ.5,700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.

மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள்: ரூ.5,700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு


மத்திய அரசுக்கு, மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள் மூலம் பெருமளவு வருமானம் கிடைத்து வருகிறது. இதில் பல கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது.

இது குறித்து உற்பத்தி வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது

இந்தியா முழுவதும் மத்திய உற்பத்தி வரி, சேவை வரிகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு இது பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு 1,190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன்படி உற்பத்தி வரி ஏய்ப்பாக ரூ.1,356 கோடியும், சேவை வரி ஏய்ப்பில் ரூ.4,353 கோடியும் ஆக மொத்தம் ரூ.5,700 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்து இருக்கிறது என்று கணக்கிட்டு இருக்கிறோம்.

இந்த வரி ஏய்ப்பு செய்வோருக்கு கடும் தண்டனைகள் அளிக்கக்கூடிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டு இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

No comments: