Friday, May 20, 2011

நகைபறிப்பு, கொள்ளை என தலைவிரித்தாடும் தமிழகம்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்!!!

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணின் வாயை பொத்தி நகை பறிப்பு
ரோட்டில் நடந்து சென்ற     பெண்ணின் வாயை பொத்தி நகை பறிப்பு

தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூச்சியூரைச் சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (60). நேற்று இரவு 8 மணியளவில் இவர் தொண்டாமுத்தூர் ரோடு ஓணாம்பாளையம் அய்யப்பன் கோவில் அருகில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் விஜயலட்சுமியின் வாயை பொத்தினார்கள்.

பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். அந்த வழியாக இருட்டுக்குள் சென்று விட்டனர். நகையை பறி கொடுத்த விஜயலட்சுமி திருடன்.. திருடன் என கத்தினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் நகையை பறித்தவர்கள் அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் தலைமறைவாகி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டியில் பயங்கரம்: அடகு கடை காரரை கொன்று கொள்ளை; ரூ.5 கோடி நகைகளை அள்ளிச் சென்றனர்
பண்ருட்டியில் பயங்கரம்: அடகு கடை காரரை கொன்று கொள்ளை;  ரூ.2 கோடி நகைகளை அள்ளிச் சென்றனர்

பண்ருட்டியை சேர்ந்தவர் சண்முகம் செட்டியார் (வயது 75). இவர் பண்ருட்டி ராஜாஜி ரோட்டில் அடகு கடை வைத்திருந்தார். கடையின் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். நேற்று இரவு அவர் கடையை மூடி விட்டு கடையின் மாடி அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கடையின் பின்பக்க ஜன்னலை பெயர்த்து உள்ளே நுழைந்தனர். கொள்ளையர்களை பார்த்ததும் சண்முக செட்டியார் திடுக்கிட்டு எழுந்தார்.உடனே கொள்ளையர்கள் அவர் மீது பாய்து கை, கால்களை கட்டிப்போட்டனர். அவர் வாயில் துணியை கட்டி முகத்தை அமுக்கினார்கள்.இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் கொள்ளையர்கள் அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அங்கிருந்த கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.சண்முக செட்டியார் நகைக்கடையில் எப்போதுமே ரூ.5 கோடிக்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அவை அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளி சென்று விட்டனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே துணிகர சம்பவம்: சமையல் அறை வெண்டிலேட்டரை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை;ராணுவ வீரர் வீட்டில் 50 பவுன் நகைகள்- ரூ20 ஆயிரம் பணம் கொள்ளை.

2 comments:

மதுரை சரவணன் said...

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்பட வில்லை.. திருடர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை

நண்பன் said...

ithan thamilagama?