Friday, May 20, 2011

ஏற்காட்டில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்.

ஏற்காட்டில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்

ஏழைகளின் ஊட்டி என செல்லமாக அழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளாக காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரக்குமார் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதால் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள் கொட்டுவது குறைந்தது.

ஆனால் தற்போது கோடைக்காலத்தால் திரளான சுற்றுலா பயணிகள் ஏற்காடு வந்து செல்கிறார்கள். இவர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகளை அப்படியே ரோட்டிலும், மலைப்பகுதியிலும், மலைப்பாதையிலும் வீசி செல்கிறார்கள். இதனால் ஏற்காட்டின் அழகு கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சேலம் வந்து இருந்த நடிகர் விவேக் கூறும்போது, இயற்கை அழகை ரசிக்கலாம் என பலரும் ஏற்காட்டிற்கு வருகிறார்கள். மலைகளையும், இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம் என நினைத்து ஏற்காடு வருபவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கும்.

காரணம் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பொருட்களாக கிடக்கிறது. இவைகளை போட குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இன்னும் சில நாட்களில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்க இருக்கிறது.

இதனால் ஏற்காடு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கலெக்டரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

No comments: