Friday, May 20, 2011

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்.

கனிமொழி கைது குறித்து  கருணாநிதி விளக்கம்


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசியது :

கனிமொழி கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்

மேலும் கனிமொழி கைது குறித்து உங்கள் மனநிலை என்ற கேள்விக்கு உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என தெரிவித்தார்.

No comments: