Saturday, May 21, 2011

கோர்ட்டில் கண்கலங்கிய கனிமொழி.



கனிமொழிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி.

கனிமொழி எம்.பி.யின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, அதற்கான காரணங்களை 144 பக்க உத்தரவில் விளக்கி கூறி இருந்தார்.

முடிவில், இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் கனிமொழி கண்ணியமாக நடந்து கொண்டதற்கு தனது சிறப்பு பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.

பெண் என்பதற்காக ஜாமீன் மனுவில் சலுகை காட்ட முடியாது என்று கூறியபின், இந்த பாராட்டை நீதிபதி தெரிவித்தார்.

கனிமொழியின் கண்ணியமிக்க நடத்தைக்காக அவருக்கு சில சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அப்போது நீதிபதி சைனி குறிப்பிட்டார்.


கோர்ட்டில் கண்கலங்கிய கனிமொழி.


டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதும், கண்கலங்கிய கனிமொழி, தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியுடன் இருந்தார். அருகில் இருந்த அவருடைய கணவர் அரவிந்தன், கனிமொழிக்கு ஆறுதல் கூறினார்.

உடன் இருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அதிர்ச்சி அடைந்தார். பெண் காவலர்கள் கனிமொழியை வெளியே அழைத்துச் சென்றபோது துயரம் தாங்காமல் அவருடைய கண்கள் பனித்தன.


திகார் சிறையில் கனிமொழிக்கு டெலிவிஷன் வசதி.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட கனிமொழி எம்.பி., நேற்று மாலை டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் (6-ம் எண் ஜெயில்) அடைக்கப்பட்டார்.

கனிமொழி அடைக்கப்பட்டு இருக்கும் 15-க்கு 10 அடி உள்ள அறையில் டெலிவிஷன், பத்திரிகைகள், மின்விசிறி, கட்டில் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனிமொழி அடைக்கப்பட்டு இருக்கும் 6-ம் எண் ஜெயிலில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து உளவு பார்த்ததாக கைதான மாதுரி குப்தா, டெல்லி கவுன்சிலர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா ஜெயின் போன்ற பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கனிமொழியுடன் கைதான கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் 4-ம் எண் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

ஊழல் வழக்கில் கைதான காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பு குழு தலைவர் சுரேஷ்கல்மாடி, `நால்கோ' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அபய்குமார் ஸ்ரீவத்சா ஆகியோர் அந்த ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

1 comment:

ASHOK said...

இப்போ என்னா அந்தம்மா கண் க‌லங்குனாங்கன்னு நீங்க ரொம்ப ஃபீல் பன்ரீங்க. உப்பு தின்னா தண்ணீ குடிச்சு தானெ ஆவனும்