Saturday, May 21, 2011

பக்தர்கள் வழங்கிய ரூ.34 கோடி சொத்துக்களை விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய  ரூ.34 கோடி சொத்துக்களை விற்க  திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் பணம்-நகைகளை போடுவது வழக்கம். சில பக்தர்கள் தங்களது நில பத்திரங்களை காணிக்கையாக வழங்குவார்கள். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ளது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அந்த நிலங்களின் மதிப்பை கணக்கிட்டனர். அப்போது அவற்றின் மதிப்பு ரூ.34 கோடி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். மொட்டை போடும் இடம், அன்னதான காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments: