Saturday, May 21, 2011

ரயில்வே : ஒரே மாதத்தில் 5,490 கோடி வருமானம்.


ரெயில்வே துறைக்கு, சரக்கு போக்குரத்தின் மூலம், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.5,490.93 கோடி வருமானம் கிடைத்து இருக்கிறது.

இதில் நிலக்கரி ஏற்றிச்சென்றதால் கிடைத்த வருமானம் மட்டும் ரூ.2,278.14 கோடி ஆகும். இந்த வருமானம் 370.37 லட்சம் டன் நிலக்கரியை ஏற்றிச்சென்றதன் மூலம் கிடைத்து இருக்கிறது.

90.02 லட்சம் டன் இரும்பு தாது ஏற்றிச்சென்றதன் மூலம் ரூ.730.42 கோடி வருமானமும், 90.03 லட்சம் டன் சிமெண்ட் ஏற்றிச்சென்றதால் ரூ.560.50 கோடியும் வருமானம் கிடைத்து இருக்கிறது.

40.09 லட்சம் டன் உணவு தானியம் ஏற்றிச்சென்றதன் மூலம் 436.22 கோடி வருமானமும், 30.34 லட்சம் டன் பெட்ரோலியம் பொருட்களை ஏற்றிச்சென்றதன் மூலம் 286.44 கோடி வருமானமுன் கிடைத்து இருக்கிறது.

No comments: