Saturday, May 28, 2011

கறுப்பு பணத்தை பறிமுதல் செய்ய உயர்மட்ட குழு அமைப்பு : மத்திய அரசு நடவடிக்கை.


கறுப்புப் பணத்தை மீட்பதற்காக நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய ஓர் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழு, கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவது, அதை வெளிநாடுகளில் கொண்டு சென்று பதுக்குவது, அதை பறிமுதல் செய்வது ஆகியவை தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை ஆராயும்.

சட்டவிரோதமான வழிகளில் கறுப்பு பணம் உருவாவதை கட்டுப்படுத்த, தற்போதைய சட்டரீதியான வழிமுறைகளையும், நிர்வாக வழிமுறைகளையும் ஆய்வு செய்யும். இந்த குழு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, 6 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

No comments: