Saturday, May 28, 2011

மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.

மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து அரசு தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிற வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா ராஜினாமா கடிதம் அளித்தார்.

அவர் பதவி விலகலுக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யரை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமித்து அரசு ஆணையிடுகிறது.

இவரது பதவிக்காலம் 2011-ம் ஆண்டு மே 27-ந் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments: