Saturday, May 28, 2011

விரைவில் உடல்நலம் பெற்று திரும்புவேன் : ரஜினிகாந்த் பேச்சு.


நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் புறப்பட்டார். மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் உடன் சென்றனர்.

ஆம்புலன்ஸ் மூலமாக அவர் விமானத்தின் அருகேயே அழைத்துச் செல்லப் பட்டார். இதற்காக சிறப்பு அனுமதி வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுகிறார்.

.ரஜினிகாந்த் பேசிய குரல் பதிவை ரஜினி மகள் சௌந்தர்யா ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார்.

ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... பரபரப்பு ஆடியோ

அவர் புறப்பட்டுப் போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக் காத்திருந்தனர். ரஜினி முகத்தை பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆம்புலன்ஸில் ரஜினியை அழைத்துச்சென்றதால் பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் முகத்தை காட்டாமல் ரசிகர்களுக்காக தனது குரலை பதிவு செய்து கொடுத்திருக்கிறார் ரஜினி.

அந்த ஆடியோவில் ரஜினியின் குரல் மிகவும் தளர்ந்திருக்கிறது. அவர் உடல் நிலையை அவரின் குரல் உணர்த்துகிறது.

அந்த ஆடியோ :

‘’ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன். ஹா..ஹா...ஹா.... ஹேப்பியா போய்கிட்டு இருக்குறேன் நானு.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா. நீங்க கொடுக்கிற ஒரு அன்புக்கு நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது.

பணம் வாங்குறேன்... ஆக்ட் பண்றேன்... அதுக்கே இவ்வளவு அன்பு கொடுக்கிறீங்கன்னா, இதுக்கெல்லாம் நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது.

டெஃபனெட்டடா நீங்க எல்லோரும் தலை நிமிர்ந்து வாழும்படி, எங்க fans through out the world, தலை நிமிர்ந்து வாழும்படி நான் நடந்துக்கிறேன் கண்ணா. கடவுள் கிருபை என் மேல் இருக்கு. என் குருவின் கிருபை என் மேல் இருக்கு.

எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்களோட கிருபை எல்லாம் என் மேல, என் மேல இருக்கு. நான் சீக்கிரம் வந்துடறேன்.

ஓகே. பாய். குட்’’


ஆடியோவை கேட்க இங்கே கிளிக் செய்யவும்....

http://www.nakkheeran.in/WebTv.aspx?WTV=8


No comments: