Saturday, April 23, 2011

ஐநா அறிவிப்பு : இலங்கை குறித்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் .


இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை திருத்தம் எதுவுமின்றி முழுமையாக வெளியிடப்படும் என்று ஐநா சபை அறிவித்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில், ஐநாவின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக், இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஐநா அறிக்கையை பகிரங்கமாக வெளியிடக் கூடாது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இக்கோரிக்கையை ஐநா நிராகரித்துவிட்டது.

இன்னும் சில நாட்களில் ஐநா அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

மே தினத்தில் ஐநா அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த, இலங்கை அரசு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: