Saturday, April 23, 2011

செக்ஸ் தொல்லை-கணவரை அரிவாளால் வெட்டிய புது மணப்பெண் கைது.

செக்ஸ் தொல்லை தந்து, டார்ச்சர் செய்த கணவரை அரிவாளால் வெட்டிய புதுமணப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் நடராஜனுக்கும் (30) குளித்தலையைச் சேர்ந்த சுபாவுக்கும் (23) ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணம் நாளில் இருந்து நடராஜன் மனைவிக்கு அளவுக்கு அதிகமாக செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுபா உடல்நிலை சரியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தபோதும் நடராஜன் செக்ஸ் தொல்லை கொடுத்தாராம்.

இதையடுத்து சுபா வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து நடராஜனின் தொண்டைப் பகுதியில் வெட்டினார்.

நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய குடும்பத்தினர் ஓடி வந்து அவரை திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரணை செய்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுபாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments: