Saturday, April 23, 2011

ஐ.நா சபைக்கு எதிராக - இலங்கை 10 இலட்சம் கையொப்பம் திரட்டுகிறது.


இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில்,

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு இலங்கையின் பலதரப்பிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இலங்கை நாட்டு மக்களிட மிருந்து பத்து லட்சம் கையொப்பங்களைத் திரட்டும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.

இலங்கை தனியார் போக்குவரத்து சேவை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும், இந்த வேலைத்திட்டம், கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆரம்பிக்கப் படவுள்ளதாகவும், அறியப்படுகிறது.

No comments: