Saturday, April 23, 2011

இந்தியா, சீனா எழுச்சி : ஒபாமா பேச்சு.


உலகில் இந்தியாவும் சீனாவும் எழுச்சி பெற்று வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒபாமா பேசியதாவது :

உலகம் முழுவதும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. மத்திய கிழக்குப் பகுதியில் பல நாடுகளில் ஸ்திரமற்ற நிலை உள்ளது.

தொழில்நுட்பத்தால் உலகமே சுருங்கி வருகிறது. வேகமாக வளரும் நாடுகள் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துகின்றன.

அமெரிக்காவில் நாம் தற்போது அனுபவித்து வரும் சூழலை, நமது எதிர்கால தலைமுறையினரும் அனுபவிக்கும் வகையில் புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டார்.

No comments: