Tuesday, June 7, 2011

திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கும் எல்.கே.ஜி. மாணவி.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் சொந்தமாக கட்டிட வசதி கூட இல்லாத ஒரு சிறிய கிராமத்து பள்ளியில் (ஸ்ரீராமஜெயம் வித்யாலயா) எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைதான் ராகவி.

இவள் அதிசய குழந்தையாக உள்ளாள். திருக்குறள் என்றதும் 100 திருக்குறளை திக்காமல் திணறாமல் கடகடவென சொல்கிறாள். 5 என்றவுடன் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், ஐம்பூதங்கள், ஐவகை நிலங்கள் என 5 செய்திகளை அடுக்கி கொண்டே போகிறாள்.

நாடுகள் என்றவுடனேயே உலகத்தின் அத்தனை நாடுகளுக்கான தலைநகரங் களையும், நாட்டின் தேசிய பறவை, தேசிய மலர், தேசிய பூ, தேசிய மரம், தேசிய விலங்கு என அனைத்தையும் சொல்கிறாள்.

மாநிலங்கள் என சொன்னதும் இந்தியாவின் அத்தனை மாநிலங்களையும் அதன் தலைநகரங்களையும் சொல்கிறாள். மேலும் கனீரென்ற குரலில் பேசி கண்ணகி பாத்திரத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதமான நடிப்புத்திறமையும் மாணவி ராகவியிடம் உள்ளது.

இக்குழந்தையை பள்ளியின் தாளாளர் ஜெயமணி, பெற்றோர் செந்தில்குமார்-இந்திரா ஆகியோர் மேலும் சாதனை படைக்க ஊக்குவித்து வருகின்றனர்.

No comments: