Tuesday, June 7, 2011

பாரதீய ஜனதா போராட்டத்தில் சுஷ்மாசுவராஜ் நடனம்.


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் போராட்டம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப் பட்டது. உண்ணாவிரத பந்தலில் நள்ளிரவில் புகுந்த போலீசார் தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்ததுடன் பாபா ராம்தேவை டெல்லியில் இருந்து வெளியேற்றியது.

போலீசாரின் இந்த செயலை கண்டித்து டெல்லி ராஜ்காட்டில் பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் நடனம் ஆடினார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:-

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் சுஷ்மாசுவராஜ் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் நடனம் ஆடியது கண்டிக்கத்தக்கது. சத்யாகிரக போராட்டத்துக்கு அவர் அளித்துள்ள முக்கியத்துவம் இதுதானா? இப்படித்தான் சத்தியாகிரகத்தை வெளிப் படுத்துவதா? அதில் என்ன சந்தோஷப்பட இருக்கிறது.

அப்படி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இருந்தால் அன்னாஹசாரே அல்லது பாபாராம்தேவ் ஆகியோர் முன்னிலையில் நடனம் ஆடட்டும். காந்தி சமாதியின் புனிதத்தை கெடுக்க வேண்டாம் என்றார்.

No comments: