Tuesday, June 7, 2011

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேலூர் கோர்ட்டில் சரண்.


மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்டம் மேலூர் கோர்ட்டில் இன்று சரணடைந்தார். பின்னர் அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது மேலூர் அருகே கோவிலில் ஏற்பட்ட தகராறில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உட்பட 6 பேர் மீது, மேலூர் தாசில்தார் காளிமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திடீரென காளிமுத்து தான் அளித்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை கோர்ட் ஏற்கவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த அடிப்படையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 6 பேரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தனர்.

முன்ஜாமீன் வழங்கப்பட்டதன் பேரில் மதுரை மேலூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி யாத்மின் முன்பு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னள் ஆகிய இருவர் மட்டும் இன்று காலை ஆஜரானார்கள்.

இதையடுத்து இருவரையும் ஜாமீனில் செல்ல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அழகிரி வந்ததால் மேலூர் கோர்ட் வளாகத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: