Tuesday, June 7, 2011

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும் : டெல்லி ஐகோர்ட்.

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும்: டெல்லி ஐகோர்ட்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. திகார் ஜெயிலில் உள்ளார். கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ. கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்தது.

அப்போது கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாதாடினார். சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்காமல் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (8-5-2011) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: