Tuesday, June 7, 2011

டெல்லியில் நாளை நடக்கும் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு : தடையை மீறப்போவதாக அறிவிப்பு.

டெல்லியில் நாளை நடக்கும்  அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: தடையை மீறப்போவதாக அறிவிப்பு

டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த காந்தியவாதி அன்னா ஹசாரே 8-ந்தேதி ஒருநாள் உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

ஜந்தர்மந்தரில் நடத்த திட்டமிட்டுள் இந்த உண்ணாவிரதத்துக்கான ஏற்பாடுகளை அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள். உண்ணாவிரதம் அமைதியாக நடைபெறும். கூட்டத்தில் அனைத்து மத பிரார்த்தனைப் பாடல்கள் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர லோக்பால் மசோதா குறித்து விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் கூட்டம், ஊர்வலம் உள்பட ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தக்கூடாது என்று போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்றாலும் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை திட்டமிட்டப்படி நடத்த அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக உள் ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் என்பவர் இதுபற்றி கூறுகையில், அன்னா ஹசாரே நாளை ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

பிரபல வக்கீல் சாந்திபூஷன் டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுதி சிறப்பு அனுமதி கேட்டுள்ளார். அவர் தனது கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மத்திய டெல்லி பகுதியில் அமைதியை சீர்குலைக்கும் மிரட்டல் எதுவும் இல்லை. அவசரமான சூழ்நிலையும் இல்லை. அப்படி இருக்கும் போது மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பது மக்கள் உரிமையை மீறுவதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

8-ந்தேதி நடக்கும் உண்ணாவிரதம் அமைதியாக நடை பெறும் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அன்று ஜந்தர் மந்தருக்கு வரும் மக்களை தடுத்து நிறுத்தினால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை பறிப்பதாக இருக்கும். டெல்லி போலீசார் இத்தகைய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு வக்கீல் சாந்தி பூஷன் கூறினார்.

No comments: