Tuesday, June 7, 2011

ஓசூர் தொழிற்சாலையில் பிரதமர் பயன்படுத்தும் விமானம் பழுது பார்க்கும் பணி.


ஓசூர் அருகே பேள கொண்டப்பள்ளியில் தனியார் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 2 பேர் முதல் 6 பேர் வரை பயணம் செய்யக் கூடிய குட்டி ரக பயணிகள் விமானம், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆள் இல்லாத குட்டி விமானங்கள் தயாரிக்கப்படுகிறது.

இதைத் தவிர பெரிய மற்றும் சிறிய ரக பயணிகள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பழுது நீக்கி தரப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்தும் விமானத்தை இங்கு பழுது பார்க்க விமானப்படை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த சில நட்களுக்கு முன்பு வந்து ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. (பொறுப்பு) சைலேந்திரபாபு கடந்த 30-ந்தேதி ஓசூர் வந்து பிரதமர் விமானம் வர உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் பிரதமர் பயன்படுத்தக்கூடிய விமானம் நேற்று ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப் பள்ளியில் உள்ள தனியார் விமான தயாரிப்பு நிறு வனத்திற்கு வந்தது. இங்கு விமானத்தின் பழுதுகள் சரிபார்க்கப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி மேற்பார்வையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments: