Tuesday, June 14, 2011

`செக்ஸ்' சித்ரவதை செய்த கள்ளக்காதலன் கொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்.

நெல்லை அருகே இன்று `செக்ஸ்' சித்ரவதை செய்த  லாரி டிரைவர் கொலை கள்ளக்காதலி வெறிச்செயல்


நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த நல்லம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகன் ராஜகோபால் (29). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. ராஜகோபாலுக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் 2-வது மனைவி வெள்ளத்தாய் (45) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

வெள்ளத்தாய் அப்பகுதியில் உள்ள பள்ளியின் சத்துணவு கூடத்தில் சமையல்காரராக பணிபுரிந்துவந்தார். மகன் வயது வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை சுட்டடிக்காட்டி அருணாச்சலம் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

இவர்களது விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்து மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார்கள். ஆகையால் அவமானம் தாங்காமல் அருணாசலம், மனைவி வெள்ளத்தாயை பிரிந்து சென்றார். அருணாசலத்தின் இந்தசெயல் கள்ளக்காத லர்களுக்கு மிகவும் சவுகரியமாகி விட்டது. அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜகோபால் சந்திக்க வரும்போதெல்லாம் உல்லாசமாக இருக்க வெள்ளத்தாயை வலியுறுத்தினார். அதில் வெள்ளையம்மாளுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ராஜகோபால் வலுக்கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்தார். இதனால் வெள்ளத்தாள் கடும் அவதிக்கு ஆளானார். ராஜகோபாலின் `செக்ஸ்' சித்ரவதை தாங்காமல் நல்லம்மாள்புரத்திலிருந்து பாளைக்கு வந்து தனியாக வீடு எடுத்து தங்கினார்.

வாரவேலை நாட்களில் மட்டும் நல்லம்மாள்புரத்திற்கு சென்று தங்கியிருந்து பணிக்கு சென்றுவந்தார். மற்ற நாட்களில் பாளையிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று நல்லம்மாள்புரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதனையறிந்த ராஜகோபால் அங்கு சென்றார். குடிபோதையில் இருந்த அவர், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு வெள்ளத்தாயிடம் கூறினார்.

அதற்கு அவர் மறுக்கவே பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். இது வெள்ளத்தாய்க்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே கள்ளக்காதலன் ராஜகோபாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இன்று அதிகாலை ராஜகோபால் அயர்ந்து தூங்கிக்கோண்டிருந்தார்.

அப்போது வீட்டின் வெளியே கிடந்த பாறாங்கல்லை வெள்ளத்தாய் தூக்கிவந்து ராஜகோபாலின் தலையில் போட்டார். இதில் அவர் தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்பு வெள்ளத்தாய் மானூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அடிக்கடி உல்லாசமாக இருக்க வலியுறுத்தியது மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக உல்லாசம் அனுபவித்ததால் கள்ளக்காதலனை கொன்றதாக வெள்ளத்தாய் பரபரப்பு வாக்குமூலம் அள்த்துள்ளார்.

No comments: