Tuesday, June 14, 2011

“வெப்காமிரா” மூலம் உடல் அழகை ரசிக்கிறார்கள்” : கம்ப்யூட்டர் மையங்களில் அரங்கேறும் ஆபாச லீலைகள்.

“வெப்காமிரா” மூலம் உடல் அழகை  ரசிக்கிறார்கள்” : சேலத்தில் பரவும் புது செக்ஸ் கலாச்சாரம்: கம்ப்யூட்டர் மையங்களில் அரங்கேறும் ஆபாச லீலைகள்

வரலாற்று, ஆய்வு தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் இண்டர்நெட் எனப்படும் இணையதளம் மூலம் மக்கள் பயன்அடைந்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு புறம் நன்மை இருந்தாலும், மற்றொரு புறம் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீர்கேட்டு வருகின்றனர்.

சேலத்தில் ஏராளமான இண்டர்நெட் மையங்கள் இருக்கிறது. தற்போது பெரும்பாலும் இந்த மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து விட்டது. காரணம் பெரும்பாலானவர்கள் கம்ப்யூட்டர், வாங்கி வீட்டிலேயே ப்ரவுசிங் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதன் விளைவு ப்ரவுசிங் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் பெரும்பாலும் குறைந்து விட்டது.

முதலீடு போட்டு அதற்கு உண்டான வருமானம் இல்லாமல் பலர் அவதியடைந்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கவர தற்போது பல இண்டர்நெட் மையங்களில் ஆபாச காட்சிகள் தங்கு தடையின்றி பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பு போலீசார் சோதனை நடத்தி குறிப்பிட்ட சில வெப்சைட்டுகளை முடக்கி வைத்தனர். ஆனால் தற்போது போலீசாரின் கண்காணிப்பு, நடவடிக்கைகள் இல்லாததால் மீண்டும் இண்டர்நெட் மையங்களில் ஆபாசபடம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சேலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இண்டர்நெட் மையத்தில் எப்போது பார்த்தாலும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கூட்டமாகவே அலைமோதுகிறது. பேஸ் புக் மூலம் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்வை ஏற்படுத்தி கொள்கின்றனர். பின்னர் அவர்கள் ஆபாசமாக கலந்துரையாடுகின்றனர்.

இதன் உச்சகட்டமாக சில ஆண்கள் வெப்காமிரா மூலம் பெண்களை தொடர்பு கொண்டு அவர்களை பற்றி ஜாலியாக பேசி கொண்டே செல்கின்றனர். பின்னர் திடீரென அவர்கள் செக்சாக பேசி கொள்கின்றனர். இதன் விளைவு அவர்கள் இருவரும் உடல் உறுப்புகளை வெப்காமிரா மூலம் பார்த்து ரசிக்கின்றனர். அவற்றை சில இளைஞர்கள் ரெக்கார்டிங் செய்து அதை இண்டர்நெட்டில் யூடுப்பில் வெளியிட்டும் வருகின்றனர்.

பள்ளி, மாணவர்கள் முதலே இந்த ஆபாச லீலைகளில் ஈடுபடுகிறார்கள். பள்ளியிலேயே இ-மெயில், சேட்டிங், என பலவும் கற்றுக்கொண்டு வரும் அவர்கள் வீட்டில் ஜாலியாக கம்ப்யூட்டரில் விளையாட முடியாது என்ற காரணத்தினால் கம்ப்யூட்டர் மையங்களை நோக்கி செல்கின்றனர்.

வெப் காமிரா மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஜராகும் ஜோடிகள் மணிகணக்கில் ஜாலியாக ஆபாச லீலைகளை அரங்கேற்றி வருகின்றனர். அதோடு சில இளைஞர்கள், ஆபாச வார்த்தைகளை பேசி பெண்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களின் போட்டோவை பெற்று அதிலும் மோசடி செய்து வருகின்றனர். ஆண்-பெண் என்று வித்யாசம் இன்றி அனைத்து தரப்பினரும், வெப்காமிரா மூலம் ஆபாசத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

கல்லூரி மாணவிகள், சிலர் ப்ரவுசிங் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு ஜாலியாக பாய்ப்ரண்டுடன் சேட்டிங் செய்கிறார்கள். ஒரு சில கம்ப்யூட்டர் மையங்களில் இது போல் ஆபாச படங்களை பார்ப்பவர்களை எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். ஒரு சில கம்ப்யூட்டர் மையங்களில் இதை கண்டு கொள்வதில்லை.

பொதுவாகவே இண்டர் நெட் மையங்களில் பல கம்ப்யூட்டர்கள் இருந்தாலும் அவற்றின் சர்வர்கள் அனைத்தும் ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும். அதன் மூலம் எந்தெந்த கம்ப்யூட்டரில் யார், யார்? என்னென்ன வெப்சைட்டுகள் பார்க்கிறார்கள் என்று கண்டுபிடித்து விட முடியும்.

சேலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தும் ஒரு வாலிபரிடம் கேட்ட போது, பெரும்பாலும் கல்லூரி மாணவிகள் ப்ராஜெக்ட் பிரிண்டவுட் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு ஆபாசபடங்களை தான் பார்க்கிறார்கள். எங்களுக்கு தெரிந்து பல மாணவிகளை சத்தம் போட்டுள்ளோம். அதற்கு பின்னால் அவர்கள் வருவதே இல்லை என்றார்.

ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவரும் இண்டர்நெட் மையங்களில் இஷ்டம் போல் ஆபாச லீலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெப்காமிரா மூலம் தொடர்பை ஏற்படுத்தும் அவர்கள் ஓகே என்றவுடன் ஒரு இடத்தில் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருக்கிறார்கள். பின்னர் அதோடு அவர்கள் தங்களுக்குள் உள்ள தொடர்பை துண்டித்து கொள்கின்றனர்.

தொடர்ந்து அவர்கள் மீண்டும் வேறு நண்பர்களை அறிமுகம் செய்து கொண்டு இதே போல் செய்கிறார்கள். பிளேபாய்கள் போல பிளே கேள்களும் அதிகளவில் உருவாக இண்டர்நெட் மையங்கள் ஒரு முக்கியமான காரணமாக விளங்கி வருகிறது. எனவே சைபர் கிரைம் போலீசார் இதில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலைநாட்டு கலாச்சாரத்தையும், பின்னுக்கு தள்ளிவிடும் இந்திய கலாச்சாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: