Monday, May 2, 2011

ஈரோடு - கோவைக்கு கூடுதல் பாசஞ்சர் ரெயில்.

ஈரோடு-கோவைக்கு கூடுதல் பாசஞ்சர் ரெயில்

ஈரோட்டில் இருந்து கோவைக்கு தினமும் காலை 7 மணிக்கு மட்டும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதுதவிர சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஈரோட்டில் இருந்து கோவைக்கு செல்கின்றன.

இந்த நிலையில் கூடுதலாக ஈரோடு-கோவைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து கோவைக்கு மாலை 3 மணிக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடைகிறது. பின்னர் கோவையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 8.45 மணிக்கு ஈரோடு வருகிறது.

இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மட்டும் ஈரோட்டில் இருந்து கோவைக்கு இயக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம்- ஈரோடு, திருப்பூர் கோவை தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் புதிய பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படவேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: