Monday, May 2, 2011

பின்லேடன் மரணம் : பாகிஸ்தான் உறுதி - அமெரிக்கர்கள் மகிழ்ச்சி.


பாகிஸ்தான் உறுதி

அல்கொய்தா தீவரவாதிகளின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

இதை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி அளித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 150 கி.மீ., தூரத்தில் இருக்கும் அட்டோபாபாத்தில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் ஒசாமாவின் மறைவை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,யும் உறுதி செய்துள்ளது.


அமெரிக்கர்கள் மகிழ்ச்சி

அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவுப்படை அமெரிக்க உளவுத்துறை சிஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதால் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் மரணம் அடைந்தான்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அமெரிக்கர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.

வெள்ளை மாளிகை முன்பு திரண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி பரிமாற்றம் செய்துகொண்டனர்.


பாகிஸ்தானில் அதிர்ச்சி:


உலகையே குலுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருப்பதாக பலமுறை அமெரிக்கா சொல்லி வந்தது. இதை பாகிஸ்தான் அரசுத் தரப்பும், ராணுவத் தரப்பும் தொடர்ந்து மறுத்து வந்தன.

ஆனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேடன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

No comments: