
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான, நடிகர் கார்த்தி, விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி, ஜோதி மீனாட்சி ஆகியோரது மகள் ரஞ்சனியை திருமணம் செய்யவிருக்கிறார்.
வருகிற ஜூலை 3-ந்தேதி கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் இத் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்திற்கான நிச்சயதார்த்த விழா ஈரோடு, கிளாம்பாடி கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டில் நடைபெற்றது.
இதில் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது சகோதாரி பிருந்தா, பிருந்தாவின் கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா உள்பட உறவினர்கள் பங்கேற்றனர்.
சூர்யாவின் மனைவி ஜோதிகா எங்கே? என்று ரசிகர்கள் சூர்யாவை பார்த்து கேட்டதற்கு. அவர் சிரித்தவாறு அங்கிருந்து சென்று விட்டார்.
மணப்பெண் ரஞ்சனியின் வீட்டு முன்பாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
மிக எளிமையாக இந்து முறைப்படி நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இத் திருமண நிச்சயதார்த்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு...













1 comment:
congratulation karthy sir
Post a Comment