Monday, May 9, 2011

தமிழகத்தில் மின்தடை நேரம் குறைகிறது - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு.


காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருவதை தொடர்ந்து மின்தடை சுழற்சி நேரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மின்தடை அதிகமாக காணப்பட்டு வருகிறது. மின் பற்றாக்குறை காரணமாக இரண்டு மணி நேரம் இருந்த மின்தடை தற்போது 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோக அவ்வப்போது வேறு கரண்ட்டைப் பிடுங்கி விடுகிறார்கள்.

தொடர் மின்தடை காரணமாக உபயோகிப்பாளர்களும், விவசாயிகளும், தொழிற் சாலைகளும், சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மின்தடையை கண்டித்து தமிழகத்தில் பகுதிகளில் பேரணிகளும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. நெல்லை மாவட்டத்தில் காற்றாலை முலமாக பெறக்கூடி.ய மின்சாரம் அதிகரித்துள்ளது.

இந்த போதிலும அதிகபட்சமாக 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி கிடைக்கப்பெரும். தென்காசி பகுதியை பொறுத்தவரை காற்றாலை மூலம் 600 மெகா வாட் தேவைப்படுகிறது. வீராணம், அமுதாபுரம், கீழவீராணம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், வீரசிகாமணி, சுரண்டை, ஊத்துமலை, அச்சன்புதூர், உபமின் நிலையங்களுக்கு காற்றாலை மூலம் பெறக்கூடிய மின் உற்பத்தி போக மீதமுள்ள மின்சாரம் பவர் கீரிட் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது.

இந்த காற்றாலை உற்பத்தி அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கப்பட்டிருந்த மின்தடை சுழற்சி நேரம் கடந்த சில நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக மின்தடை ஏற்படுவது இல்லை. இதனால் மின் உபயோகிப்பார்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 10 தினங்களாக விவசாயிகளுக்கு முழுமையான அளவில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மின் உற்பத்தி நெல்லை மாவட்டத்தை பொறுத்துவரை வரும் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: