Monday, May 9, 2011

ரூ.491 கோடி சொத்து குவித்த 5 உயர் அதிகாரிகள் ; வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

ரூ.491 கோடி சொத்து குவித்த 5 உயர் அதிகாரிகள்; வருமான வரித்துறை கண்டுபிடித்தது

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரவிந்த் ஜோஷி, டினு ஜோஷி, ராஜேஷ் ரஜோரா, பி.எல்.அகர்வால், வனத்துறை அதிகாரி ஆர்.கே.சின்கா ஆகியோர் மொத்தம் ரூ.491 கோடி சொத்து குவித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகத்திடம் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் பெயரில் உள்ள நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு, இதில் சேர்க்கப் படவில்லை.

இவர்களில், அகர்வால் தன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் பெயரில் 220 வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் பணம் போட்டு வைத்திருப்பதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

No comments: