Wednesday, May 25, 2011

நிர்வாணமாக நடிப்பதாக வதந்தி பரப்புவதா? சினிமாவை விட்டே விலகுவேன் ; ஐஸ்வர்யாராய் ஆவேசம்.

நிர்வாணமாக நடிப்பதாக வதந்தி பரப்புவதா?: சினிமாவை விட்டே விலகுவேன்; -ஐஸ்வர்யாராய் ஆவேசம்

நடிகை ஐஸ்வர்யாராய் இந்திப் படமொன்றில் நிர்வாணமாக நடிக்கப் போவதாக மும்பை டி.வி.சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. கதை பிடித்ததால் நடிக்க சம்மதித்துள்ளார் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டது.

இதுபற்றி ஐஸ்வர்யா ராயிடம் கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம் உடைந்து போனேன். நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும், ஒரு குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன்.

என் மாமியார் வீட்டுக்கென சில கவுரவம் இருக்கிறது. என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர். அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எனக்குள்ள கலை ஆர்வத்தை புரிந்து கொண்டு திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இது பெரிய விஷயம்.

இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும் செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை வதந்தி பரப்புவோர் உணர்ந்து கொள்ள வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான் விலகி விடுவேன். என் உயிரே போனாலும் அது போன்று நடிக்க மாட்டேன்.

No comments: