Wednesday, May 25, 2011

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு?


டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை.

சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வண்டிகள் வந்தன. பார்க்கிங் ஏரியா அருகே குண்டு வெடித்தது. பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் மற்றும் டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சிறிய ரக குண்டு வெடித்ததை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments: