Wednesday, May 25, 2011

ஆந்திராவில் ஒரே நாளில் வெயிலுக்கு 13 பேர் பலி.

ஆந்திராவில் ஒரே நாளில்    வெயிலுக்கு 13 பேர் பலி

ஆந்திராவில் உள்ள கம்மம், வாரங்கல், நல்கொண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு அக்னி வெயில் கொளுத்துகிறது. அங்கு தற்போது 114.8 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. கம்மம் மாவட்டத்தில் லஷ்மி, சுனாலி உள்பட 6 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து பலியானார்கள்.

இதே போல் வாரங்கல் மாவட்டத்தில் 2 பேர், நல் கொண்டா மாவட்டத்தில் 3 பேர், கிருஷ்ணா மாவட்டத்தில் 2 பேர் வெயிலில் வேலை செய்த போது சுருண்டு விழுந்து பலியானார்கள். இதுவரை ஆந்திராவில் வெயிலுக்கு 150 பேர் வரை பலியாகி உள்ளனர்.

தொடர்ந்து அங்கு அக்னி வெயில் சுட்டெரிப்பதால் பகலில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

No comments: