Friday, April 29, 2011

இத்தாலி மோகத்தால் இந்திய கலாசாரம் தெரியாதவர் சோனியா; ராஜசேகர ரெட்டி மகள் தாக்கு.

இத்தாலி மோகத்தால் இந்திய கலாசாரம்    தெரியாதவர் சோனியா;    ராஜசேகர ரெட்டி மகள் தாக்கு

ஆந்திர மாநிலம் கடப்பா எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அவரது சகோதரி ஷர்மிளா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தந்தை ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது ஏழைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல் படுத்தினார். அவர் ஏழைகளின் வளர்ச்சிக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அப்படிப்பட்டவரின் மகனான ஜெகன்மோகன் ரெட்டியை ஒழிக்கும் பணியில் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களால் ஒரு போதும் எனது சகோதரரை தோற்கடிக்க முடியாது. மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். என் தந்தை இறந்ததை கேட்டு ஆந்திராவில் 600-க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். அவர்களது குடும்பத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் சொல்வதற்கு சோனியா தடை விதித்தார். சோனியாவுக்கு இந்திய கலாசாரம் தெரியாது. அவர் இத்தாலி மோகம் கொண்டவர்.

இந்தியாவை இந்தியர்கள் தான் ஆள வேண்டும். வெளி நாட்டினரிடம் நாட்டை ஒப்படைக்க கூடாது. சோனியாவுக்கு நாட்டு நலன் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஆந்திராவை கலவர பூமியாக மாற்றி இருப்பாரா? தொடக்கத்திலேயே கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் ஆந்திராவில் சட்டம்- ஒழுங்கை நன்றாக வைத்திருக்கலாம். இதையெல்லாம் நாட்டு மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: