Friday, April 29, 2011

ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள் : இலங்கை அமைச்சர்.


இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ள ஐ.நா. குழு 3 முட்டாள்களின் குழு என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சே தெரிவித்ததாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி ள்ளது.

இது குறித்து வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,

3 முட்டாள்கள் கொண்ட ஐநாவின் நிபுணர் குழு இலங்கையில் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக இருக்கும் அரசை நிறுவுவதற்கான சதித் திட்டங்களுக்கு துணைபோயுள்ளது என்று விமல் குற்றம்சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுவதற்கான குழுவொன்று தாம் தயாரித்த அறிக்கையை செயலாளர் நாயகம் படித்துப்பார்க்க முன்பதாகவே வெளியிட்ட சம்பவம் வரலாற்றில் இதுதான் முதல் தடவை என அவர் குறிப்பிட்டார்.

1 comment:

அருள் said...

குழப்பும் வினவு: போற்க்குற்ற விசாரணையின் எதிரி யார்?

http://arulgreen.blogspot.com/2011/05/blog-post.html