Friday, April 29, 2011

மூச்சுத் திணறல் : தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினிகாந்த்.


நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.

ஏவி.எம். ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் ரஜினி - தீபிகா படுகோனேவுடன் டூயட் பாடல் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின் போது ரஜினிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

இதையடுத்து படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலரும் ரஜினியை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையின் தீவிர சிகிசைப்பிரிவில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் ரஜினியில் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தி அறிந்த அவரது தீவிர ரசிகர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ரசிகர்களின் முற்றுகையால் பதட்டம் நிலவியதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments: