Friday, April 29, 2011

கங்கையை சுத்தப்படுத்த ரூ 7000 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!


கங்கையை சுத்தப்படுத்தும் ரூ 7000 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்துக்களின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை நதியில் பல்வேறு மனித சடலம் உள்பட பல கழிவுகள் சேருவதால் மாசடைந்து வருகிறது.

புனித நதியான கங்கையை தூய்மை படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டில், 'தேசிய கங்கை நதி கழிமுக ஆணையம்' அமைக்கப்பட்டது. ஆணையத்தின் தலைவராக பிரதமர் நியமிக்கப்பட்டார்.


கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதற்கான திட்டம், செலவு, கண்காணிப்பு, ஒருங்கிணைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ரூ.7 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் கங்கை நதியை தூய்மைப் படுத்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த 8 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றத்தை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments: