Monday, April 25, 2011

இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. அறிக்கை இன்று வெளியீடு.


இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. அறிக்கை இன்று முழுமையாக வெளியிடப்படுகிறது.

இலங்கை உள்நாட்டு போரில் அந்நாட்டு ராஜபக்சே அரசு நடத்திய இன படுகொலை குறித்து ஐ.நா. மூவர் குழு விசாரணை நடத்தியது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவின்படி நடந்த முடிந்த இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன் சமர்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது, மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் பிரபல பத்திரிக்கை ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை இன்று முழுமையாக வெளியிடப்படுகிறது

No comments: