Monday, April 25, 2011

தூதர்களுக்கு இலங்கை அவசர அழைப்பு.


மேற்கத்திய நாடுகளில் உள்ள தமது தூதர்களை அவசரமாக கொழும்பு வருமாறு இலங்கை அரசு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூயார்க், வாஷிங்டன், பாரீஸ், ஜெனிவா, பெல்ஜியம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதர்களும், ஐநாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதர் உள்ளிட்டோர் இவ்வாறு கொழும்புக்கு உடனடியாக வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஐநா சபையின் அறிக்கை விவகாரத்தில், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தூதர்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: