Wednesday, April 20, 2011

ஜெயலலிதா மீது கருணாநிதி 2 அவதூறு வழக்குகள்.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது முதல்வர் கருணாநிதி 2 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுக்களி்ல்,

ஏப்ரல் மாதம் 13ம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பலமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து மத்திய அமைச்சர் ஒருவர் அரசு அதிகாரிகள் துணையுடன், திமுக ரவுடிகளை கொண்டு மிகப்பெரிய வன்முறையை தேர்தலின் போது கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளார் என்றும்,

மறுநாள் வெளியான அறிக்கையில் துணை ராணுவத்தினருக்கு ரூ.300 தினப்படியை முதல்வர் கருணாநிதியின் உத்தரவின்பேரில் தலைமை செயலாளர் கொடுக்க மறுப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும், இதனால் துணை ராணுவத்தினர் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும், எனவே சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகள் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்களம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எனவே ஜெயலலிதாவை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

No comments: