Wednesday, April 20, 2011

ஜெயலலிதாவின் கோரிக்கைகளை நிறேவேற்றிய பிரவீண்குமாருக்கு அதிமுக நேரில் நன்றி.




தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 94 மையங்களில் எண்ணப்பட உள்ளன. வாக்குப் பதிவு நடந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர், வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல சிறிது தாமதம் ஏற்பட்டது.

எனினும், வாக்குப் பதிவு நடந்த இரண்டு நாட்களுக்குள் அங்கு துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டனர்.

இந் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், மைத்ரேயன் ஆகியோர் புனித ஜார்ஜ் கோட்டையில் பிரவீண் குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

அப்போது, வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கு பிரவீண் குமாருக்கு அவர்கள் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.


No comments: