Wednesday, April 20, 2011

ஆந்திராவில் குடியை விட மறுத்த கணவனின் வாயில் ஆசிட் ஊற்றிய மனைவி.

ஆந்திராவில் குடிப்பழக்கத்தை விட மறுத்த கணவனின் வாயில் ஆசிட் ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் செகந்திரபாத்தில் உள்ள சாம்பமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் தானய்யா. கூலி தொழிலாளி. அவரது மனைவி சரளா. அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தானய்யாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனையிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். குடியை நிறுத்துமாறு சரளா எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவர் மறுத்துவிட்டார்.

நேற்று வழக்கத்தை விட அதிகமாக குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார் தானய்யா. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத கணவனின் வாயில் வீட்டில் பாத்ரூம் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை ஊற்றினார் சரளா. வாய் வெந்துபோன தானய்யா வலிதாங்கமுடியாமல் அலறினார்.

இதையடுத்து சரளா சாம்பமூர்த்தி நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை சொல்லி சரண் அடைந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தானய்யாவை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தன

No comments: