
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணு வத்துக்கும் இடையே தமிழ்ஈழ இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது இலங்கை ராணுவத்தினரால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த போர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. சபை ஒரு குழுவை அமைத்தது. அக்குழு ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூனிடம் அதன் அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில், இறுதி கட்ட போரில் இனப்படு கொலை நடந்துள்ளது. இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈவுஇறக்கமின்றி கொன்று குவித்துள்ளனர். என கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு இலங்கை அரசு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது. அது போன்று நடைபெறவில்லை என மறுப்பு கூறியது. இதற்கிடையே இறுதி கட்ட போரின் போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே, வெளியான சாவு எண்ணிக்கையை விட மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. 75 ஆயிரம் முதல் 77 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.
அதில், இறுதி கட்ட போரில் இனப்படு கொலை நடந்துள்ளது. இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈவுஇறக்கமின்றி கொன்று குவித்துள்ளனர். என கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு இலங்கை அரசு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது. அது போன்று நடைபெறவில்லை என மறுப்பு கூறியது. இதற்கிடையே இறுதி கட்ட போரின் போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே, வெளியான சாவு எண்ணிக்கையை விட மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. 75 ஆயிரம் முதல் 77 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment