Monday, August 1, 2011

திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு - படத்துடன்.

திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு.





























இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். அவர் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் வந்தார்.

நடிகை குஷ்புவுக்கு திமுகவில் பதவி எதுவும் கொடுக்காவிட்டாலும், அவர் கட்சிப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். ஆளும் அதிமுக அரசு திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபதற்காக குஷ்பூ ஊன்றுகோலுடன் வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளப் படபிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கையில், படிகட்டு செட் போட்டு அதில் குஷ்பு நடிப்பது மாதிரி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியில் நடித்தபோது படிக்கட்டு இடிந்து விழுந்ததில் குஷ்புவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றார்.

இந்நிலையில் அதிமுக அரசுக்கு எதிராக 01.08.2011 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தார். அவர் கையில் ஊன்றுகோலுடன் வந்தார். அவரை பார்த்ததும் மகளிர் அணி நிர்வாகிகளும் தி.மு.க. தொண்டர்களும் ஆரவாரம் செய்து அவருடன் கை குலுக்கினர்.

பின்னர் அவரை தி.மு.க. நிர்வாகிகள் ஒரு ஓரமாக அழைத்து சென்று நிற்க வைத்தனர். இது தொடர்பாக குஷ்புவிடம் கேட்ட போது, 10 நாட்களுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பில் காலில் காயம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, இந்த ஆர்ப்பாட்டம்

எதற்காக என்றால் திமுகவினர் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு என்ன மாற்றம் வருகிறது என்று பார்ப்போம் என்றார்.

லாரியே மேடையானது

போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்தில் மேடை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. ஆனால் ஒரு லாரியை மேடையாக்கி தி.மு.க. நிர்வாகிகள் அங்கு நிறுத்தி இருந்தனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, தாமோ. அன்பரசன், நடிகை குஷ்பு உள்பட பல்லாயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.

No comments: