Monday, August 1, 2011

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2013-ல் பொது நுழைவுத் தேர்வு : மத்திய மந்திரி கபில்சிபல் தகவல்.

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2013-ல் பொது நுழைவு தேர்வு: மத்திய மந்திரி கபில்சிபல் தகவல்

என்ஜினீயரிங் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை திட்டம் வகுத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த மாநில அரசுகளை சமாதானப்படுத்தி, எப்படியாவது பொது நுழைவுத் தேர்வு முறையை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி கபில்சிபல் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எனது கனவாகும்.

எனது இந்த கனவு 2013-ம் ஆண்டு நனவாகி விடும். அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை நடத்திய பெருமை எனக்கு கிடைக்கும். பொது நுழைவுத் தேர்வு முறையை இந்தியர்களில் 80 சதவிகிதம் பேர் வரவேற்றுள்ளனர் என்றார்.

No comments: