Monday, August 1, 2011

சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் ; 20 பேர் பலி.

சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள்    தாக்குதல்;  20 பேர் பலி

சீனாவின் ஷின்ஜியாங் மாகாணம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ளது. பாகிஸ்தானின் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சிமுகாம்கள் அமைத்துள்ளது. அங்கு பயிற்சி பெறும் தீவிரவாதிகள் ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கார் என்ற இடத்தில் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் 2 நாட்கள் நடந்தது. அதில் 20 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சீன அரசு விசாரணை நடத்தியது. அதில் சீனாவுக்குள் தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்தது தெரிய வந்தது. இச்சம் பவத்துக்கு சீனா, கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments: