Monday, August 1, 2011

2013-க்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் ஹெச்.எஸ்.பி.சி.



லாபம் பார்க்க போராடும் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க சர்வதேச வங்கியான ஹெச்எஸ்பிசி முடிவு செய்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஹெச்எஸ்பிசி. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 11.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிப் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் 11.1 பில்லியனாக இருந்தது.

லத்தீன் அமெரிக்கா, அமெரி்க்கா, இஙகிலாந்து, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வங்கியை மறுசீரமைக்கவுள்ளதால் 5 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி அறிவித்துள்ளது. வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைவர் ஸ்டூவர்ட் கூறியதாவது,

ஹெச்.எஸ்.பி.சி. வரும் 2013-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. இதை அந்த வங்கியின் தலைவர் மறுத்துள்ளார்.

நாங்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பப் போவதில்லை. ஏற்கனவே காலியாக இருக்கும் இடங்களுக்கே ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. பொருளாதாரம் மேலும் வளர்ந்தால் நாங்கள் இன்னும் அதிகமானோரை பணியமர்த்துவோம். மொத்த உற்பத்தி 7.5 சதவீதமாக இருந்தால் நல்லது. இந்தியாவின் மொத்த உற்பத்தி அதே அளவில் தான் உள்ளது. அதனால் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

இந்தியா முழுவதும் அதிக ஆட்களை எடுப்போம் என்று உறுதியளிக்க முடியாது. வங்கி சீரமைப்பின் ஒரு பகுதியாக கடன் மீட்புப் பிரிவில் உள்ள ஒரு சிலரை மட்டும் வங்கியின் பிற பிரிவில் சேருமாறு கூறினோம் என்றார்

No comments: