Saturday, June 4, 2011

கறுப்புப் பணம் மீட்பு குறித்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்கத் தயார்- கபில் சிபல்.


ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்தார். நாடெங்கும் இது எழுச்சியை ஏற்படுத்தியதால் கலக்கம் அடைந்த மத்திய அரசு ராம்தேவ் உண்ணாவிரதத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்தது.

மத்திய மந்திரிகள் கபில் சிபல், சுபோத்காந்த் சகாய் இருவரும் நேற்று சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ராம்தேவுடன் சுமூக முடிவை எட்ட இயலவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

பாபா ராம்தேவ் இன்று (சனிக்கிழமை )மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், எங்களது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றிரண்டைத் தவிர மத்திய அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.என்று கூறினார்.

இருந்தபோதும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது, சனிக்கிழமை இரவு வாக்கில் கறுப்புப் பணம் மீட்பு குறித்து எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தால் மட்டும் உண்ணா விரதத்தை கைவிட முடியும் என்று பாபா ராம்தேவ் கூறியதையடுத்து,

கறுப்புப் பணம் மீட்பு குறித்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்கத் தயார் என்று - கபில்சிபல் சொன்னதாக செய்தி வெளியானது.

1 comment:

மதுரை சரவணன் said...

கருப்பு பணம் ஒயிட் மணி ஆனால் நல்லது தான்... ஏற்படுமா?