
அல்கொய்தாவை போன்று லஷ்கர்- இ-தொய்பாவும் பயங்கர தீவிரவாத இயக்கம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜானட் நபோலிடானோ வாஷிங்டனில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல் கொய்தா தீவிரவாத இயக்கம் மீது கடந்த 10 ஆண்டுகளாக தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டது. அப்போது அதனுடன் தொடர்புடைய மற்ற இயக்கங்கள் குறித்த தகவல்களும் திரட்டப்பட்டன. அதன் அடிப்படையில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ- தொய்பாவும் அல்கொய்தாவை போன்று அதிபயங்கர தீவிரவாத இயக்கம்தான் என தெரிய வந்துள்ளது.
இதுதான் மும்பையில் தாக்குதல் நடத்தியது. அது போன்று அமெரிக்காவிலும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் அல்கொய்தாவை போன்று இதற்கும் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
மும்பையை போன்ற தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதால் அமெரிக்காவில் உள்ள துறைமுகங்கள் மற்றும் ஓட்டல்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அப்போது, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல் கொய்தா தீவிரவாத இயக்கம் மீது கடந்த 10 ஆண்டுகளாக தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டது. அப்போது அதனுடன் தொடர்புடைய மற்ற இயக்கங்கள் குறித்த தகவல்களும் திரட்டப்பட்டன. அதன் அடிப்படையில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ- தொய்பாவும் அல்கொய்தாவை போன்று அதிபயங்கர தீவிரவாத இயக்கம்தான் என தெரிய வந்துள்ளது.
இதுதான் மும்பையில் தாக்குதல் நடத்தியது. அது போன்று அமெரிக்காவிலும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் அல்கொய்தாவை போன்று இதற்கும் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
மும்பையை போன்ற தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதால் அமெரிக்காவில் உள்ள துறைமுகங்கள் மற்றும் ஓட்டல்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment