Saturday, June 4, 2011

பாபா ராம்தேவ், அரசுக்கு விடுத்துள்ள 11கோரிக்கைகள்.


ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க உண்ணா விரதம் மேற்கொண்டுள்ள பாபா ராம்தேவ் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகளில் உறுதியாக உள்ளார். அந்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

1. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல நூறு லட்சம் கோடி பணத்தை இந்தியாவின் தேசிய சொத்தாக அறிவித்து அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.

2. அளவுக்கு அதிகமாக, முறைகேடாக பணம் சம்பாதித்து, அந்த கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வைப்பது தேசிய குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.

3. ஊழல் செய்து, ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

4. அன்னா ஹசாரே தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் குழு மூலம் வரையறுக்கப்பட்டு வரும் லோக்பால் மசோதா மிகவும் வலுவான ஒரு சட்டமாக இருக்க வேண்டும்.

5. ஊழல் குற்றச்சாட்டுக்களை சீக்கிரம் விசாரித்து முடிக்க எல்லா மாநிலங்களிலும் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் உருவாக்கப்பட வேண்டும்.

6. ஊழல் செய்து சிக்கிக் கொள்ளும் வி.ஐ.பி.க்கள் மீதான வழக்கு விசாரணை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். உடனுக்குடன் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

7. ஊழல் செய்வதற்கு 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களும் ஒரு விதத்தில் உதவியாக உள்ளன. எனவே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்து விலக்க வேண்டும்.

8. பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் தொடர்பான மேற்படிப்புகளை ஒவ்வொரு வரும் தங்கள் தாய் மொழியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

9. பாரத பிரதமரை மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்யும் முறையை கொண்டு வரவேண்டும். இதனால் அரசியலில் நிலைத்த தன்மையை உருவாக்க முடியும்.

10. பொதுச்சேவை உறுதி சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

11. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.

No comments: